Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 14, 2020 08:20

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டதாகக் கூறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் குலாம் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

ஒரு ஜனநாயக போராட்டத்திற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது, அம்மாநில செயலாளர் முகமது இலியாஸ், மாநில அலுவலக செயலாளர் முகீத் ஆகியோர் டெல்லி காவல் துறையால் காவலில் வைக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது போன்ற காவல் மற்றும் கைது நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நீலப்புலிகள் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்